காங்கிரஸ் கட்சித் தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார் ராகுல் காந்தி

டிசம்பர் 4

காங்கிரஸ் தலைவர் பதவிக்குத் துணைத்தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் கட்சியின் தலைவராக, அவர் போட்டியின்றி தேர்வாகிறார். 

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தொடர்ந்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுவதால், கட்சியின் நலன் கருதி ராகுல் காந்தியை தலைவராக நியமிக்க வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்தக் கோரிக்கை தொடர்பாக முதலில் அமைதி காத்து வந்த சோனியா, நாளடைவில் தலைவராக ராகுலை நியமிக்க வேண்டும் எனத் தீர்மானித்தார். 

இதற்காக, கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். துணைத்தலைவராக இருக்கும் ராகுல்காந்தி வேட்பு மனுதாக்கல் செய்தார். நாளை வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும். காங்கிரஸ் தலைவர் தேர்தல் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படும். வேட்பு மனு வாபஸ் பெறக் கடைசி நாள் டிசம்பர் 11-ந் தேதியாகும். டிசம்பர் 16-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். டிசம்பர் 19 ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். 

எந்தப் போட்டியும் இல்லை என்றால் ராகுல் காந்தி டிசம்பர் 11-ந் தேதி காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்படுவார். முன்னதாக ஜன்பாத்தில் உள்ள சோனியாகாந்தி இல்லத்திற்குச் சென்று அவரிடம் ஆசி பெற்றார். பின்னர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ஆசி பெற்றார். காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் ராகுல் காந்தியின் பெயரை முன்மொழிந்தனர். தொடர்ந்து, மாநில தலைவர்கள் வழிமொழிந்தனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாப், மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே. அந்தோனி ஆகியோர் ராகுல் காந்தியின் பெயரை முன்மொழிந்தனர். நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மோசினா கிதவாய், ஷீலா தீட்சித், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர்  கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...