டாஸ்மாக் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கோவை, டிசம்பர் 4

டாஸ்மாக் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தி வழிப்பறி செய்யும் சமூக விரோதிகளைக் கைது செய்ய வலியுறுத்தி கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கோவையில் டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனையாகும் பணத்தை வங்கியில் செலுத்த செல்லும் ஊழியர்களைக் குறிவைத்து சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தி வழிப்பறியில் ஈடுபடுகின்றனர். தொடர்ந்து நடைபெறும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை இதுவரை யாரையும் போலீஸார் கைது செய்யவில்லை என்றும், சமூக விரோதிகளால் கொள்ளையடித்துச் செல்லப்படும் பணத்தை ஊழியர்களே செலுத்த வேண்டுமென டாஸ்மாக் நிர்வாகம் நிர்பந்திப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

இந்த நிலையில், டாஸ்மாக் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தி வழிப்பறி செய்யும் சமூக விரோதிகளைக் கைது செய்ய வலியுறுத்தி சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. அப்போது, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினார். 

மேலும், தாக்குதலுக்கு உள்ளாகும் ஊழியர்களின் மருத்துவச் செலவை நிர்வாகமே ஏற்க வேண்டும், அனைத்து ஊழியர்களுக்கும் இஎஸ்ஐ மருத்துவ திட்டத்தில் இணைத்திட வேண்டும், டாஸ்மாக் ஊழியர்களிடம் குறிவைத்து தாக்குதல் நடத்தும் சமூக விரோதிகளைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...