பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் பரிதாப சாவு

கோவை, டிசம்பர் 5

பவானி ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர். 

அன்னூரை சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மகன் கோகுல்ராஜ் (20), அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரது மகன் குகன் (20). கல்லூரி மாணவர்களான இவர்கள் இருவரும் நேற்று மதியம் பவானி ஆற்றில் குளிப்பதற்காக அன்னூரில் இருந்து சிறுமுகையை அடுத்த பழந்தோட்டம் பாலம் அருகே குளிக்கச்சென்றனர். 

நீண்ட நேரம் ஆகியும் வீடுதிரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர் சம்பவ இடத்திற்குச் சென்று மாயமானவர்களை தேடினர். 

அப்போது அவர்கள் வந்த இருசக்கர வாகனம் மற்றும் செல் போன்கள் ஒரு பகுதியில் இருந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் மாணவர்கள் இருவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சிறுமுகை போலீசார் விசாரணை நடத்தினர். உடனடியாக மாணவர்களை தேடும் பணி நடைபெற்றது. 

தற்போது (9:00 am) வாகனம் நிறுத்தப்பட்ட பகுதியில் இருந்து 3 கி.மீ தொலைவில் குகனின் உடல் கைப்பற்றப்பட்டது.  தொடர்ந்து, கோகுல் ராஜ்-ன் உடலை தேடும் பணி நடைபெற்ற்ய் வருகிறது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...