ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து கோவை மாவட்ட அதிமுகவினர் அஞ்சலி

கோவை, டிசம்பர் 05

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கோவையில் புதிதாக அமைக்கப்பட்ட அவரது சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாக கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் ஒன்று கூடு ஜெயலலிதா உருவபடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

பின்னர், அதிமுக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாகச் சென்று, அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலையின் அருகே புதிதாக அமைக்கப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வைக்கப்பட்ட இந்த புதிய சிலைகளுக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் என யாரும் செல்லாத நிலையில், இன்று முதல் முறையாகக் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் தலைமையில் இந்த புதிய சிலைகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக தொண்டர்கள் கண்ணீர் மல்க ஜெயலலிதாவின் உருவப்படம் மற்றும் சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...