தொப்பி சின்னம் வழக்கு : டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் கேவியட் மனுத் தாக்கல்

டிசம்பர் 05

தொப்பி சின்னம் தொடர்பான வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். அணிக்கு வழங்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டி.டி.வி. தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதே நேரத்தில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தனக்கு தொப்பி சின்னம் வழங்கக்கோரி அவர் மற்றொரு மனுவையும் தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தினகரனின் கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், தொப்பி சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும் என்று தெரிவித்து, அவரது மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி இந்தர்மித் கவூர் உத்தரவிட்டார். 

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொப்பி சின்னம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். தங்களைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று அவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...