அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு : அடுத்தகட்ட விசாரணை பிப்.8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

டிசம்பர் 05

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம்? என்பது தொடர்பான வழக்கில் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி மாதம் 8-ம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் யாருக்குச் சொந்தமானது என்பது குறித்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில், 2.77 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியை நிர்மோகி அகாராவுக்கும், மற்றொரு பகுதி ராமர் கோவில் கட்டவும், எஞ்சிய பகுதி முஸ்லிம்களின் சன்னி வக்பு வாரியத்துக்கும் சொந்தம் எனத் தீர்ப்பளித்தது. 

இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மூன்று தரப்பினரும் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விரைவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான சிறப்பு அரசியலமைப்பு அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

இவ்வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ராமஜென்மபூமி-பாபர் மசூதி நில பிரச்சனை தொடர்பான ஆவணங்களின் மொழிபெயர்ப்பு பணிகளை மூன்று தரப்பினரும் 12 வாரங்களுக்குள் (மூன்று மாதம்) முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அலகாபாத் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட ஆதாரங்களை 10 வாரங்களுக்குள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்படி உத்தரப்பிரதேசம் மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பு பணி முடிந்து டிசம்பர் 5-ம் தேதியில் இருந்து இறுதிக்கட்ட வாதம் நடைபெறும் என்று கூறிய நீதிபதிகள், எந்தச் சூழ்நிலையிலும் விசாரணை ஒத்திவைக்கப்பட மாட்டாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, சுமார் 19,590 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை அரசு சொசிலிட்டர் ஜெனரல் தாக்கல் செய்தார். சன்னி வக்பு வாரியம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், குறுகிய காலகட்டத்தில் இத்தனை பக்க ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது எப்படி என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், 2019-ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகே இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என கபில் சிபில் தனது வாதத்தில் கூறினார். ஆனால், இதற்கு உத்தரபிரதேச அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். தினமும் விசாரணை நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். தற்போது, மூன்று நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், பெரிய நீதிமன்ற அமர்வு, அதாவது குறைந்தது 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க வேண்டும் என கபில் சிபில், ராஜிவ் தாவான் மற்றும் மற்ற மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கூறினர்.

வாதங்கள் முடிவடைந்த நிலையில், இது தொடர்பான அடுத்த கட்ட விசாரணை அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 8-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...