ஆர்.கே. நகர் தொகுதியில் தொப்பி சின்னத்துக்கு 29 பேர் போட்டி - தினகரனுக்குச் சிக்கல் அதிகரிப்பு

டிசம்பர் 6

ஆர்.கே.நகர் தொகுதியில் இறங்கியுள்ள சுயேட்சைகளில் 29 பேர் “தொப்பி” சின்னத்தையே கேட்டுள்ளதால், தினகரனுக்குத் தொப்பி சின்னம் கிடைப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் டி.டி.வி.தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். தனது வேட்புமனுவில் தொப்பி சின்னத்துக்கே அவர் முன்னுரிமை அளித்துள்ளார். அது, கிடைக்காவிட்டால் ‘கிரிக்கெட் மட்டை’, ‘விசில்’ ஆகிய சின்னங்களில் ஒன்றை ஒதுக்க வேண்டும் என்றும் தினகரன் கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் வரலாறு காணாத வகையில் அதிக எண்ணிக்கையில் சுயேட்சைகள் களம் இறங்கி உள்ளனர். இவர்களில் 29 பேர் “தொப்பி” சின்னத்தையே கேட்டுள்ளனர். இதனால், எந்தவித தடையுமின்றி “தொப்பி” சின்னம் கிடைப்பதில் தினகரனுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே, குலுக்கல் முறையில் ‘தொப்பி’ சின்னத்தை ஒதுக்கத் தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். நாளை ‘தொப்பி’ சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும் என்பது தெரியவரும். தினகரனுக்கு ‘தொப்பி’ சின்னம் எப்படியும் கிடைத்துவிடும் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பி இருந்த நிலையில், 29 பேர் அந்தச் சின்னத்தை கேட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...