ராமருக்கு பிரம்மாண்ட ஆலயம் அமைக்க வேண்டி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

கோவை, நவம்பர் 6

ராமருக்கு பிரமாண்ட ஆலயம் அமைத்திட பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றக்கோரி இந்து முன்னணி சார்பாக கோவை காந்திபுரம் பகுதியில் காவிக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதையொட்டி அந்த இடத்தில் ஸ்ரீ ராமருக்கு பிரமாண்டமாக ஆலையம் அமைத்திட வலியுறுத்தி இந்து முன்னணியின் சார்பாக தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



இதன் ஒரு பகுதியாக மாநகர் மாவட்ட இந்து முன்னணியின் சார்பாக காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே 1000  க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போரட்டம் குறித்து இந்து முன்னணியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் குணா செய்தியாளர்களிடம் பேசுகையில், 'அயோத்தியில் ராமர் ஆலயம் அமைக்க பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 

ராமர் கோவில் கட்டுவதற்கு காஷ்மீர் மற்றும் அயோத்தியிலுள்ள முஸ்லீம்கள்  எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது' இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...