கோவையில் கல்லூரி மாணவரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கிய விவகாரம் : புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் விளக்கம்

கோவை, டிசம்பர் 6

கோவை தொண்டாமுத்தூர் அருகே காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதில் கல்லூரி மாணவருக்கு செவித்திறன் பாதித்தாக கூறப்பட்ட விவகாரத்தில், சம்மந்தப்பட்டவர்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பா.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (18), இவரது நண்பர்கள் குன்னத்தூரைச் சேர்ந்த மிதுன் (19), முத்துகுமார் (18),இந்த மூவரும் சரவணம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். 

இந்த நிலையில், மூவரும் கடந்த செவ்வாயன்று தொண்டாமுத்தூர் காவல் நிலையம் அருகே ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். 

அப்போது அங்கு ரோந்துப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மாதவன் கல்லூரி மாணவர்களின் இரு சக்கர வாகனத்தை நிறுத்தக் கூறினார்.

ஆனால் மாணவர்கள் சிறிது தூரம் தள்ளிச் சென்று வாகனத்தை நிறுத்தியதாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் மாதவன் மிதுனை அடித்துள்ளார். பின்னர் மூவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். வாகனத்தை ஒட்டி வந்த தினேஷ்  மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தார்.

இதனிடையே உதவி ஆய்வாளர் தாக்கியதில் மிதுனின் காதில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. அங்கிருந்த நண்பர்கள் அவரை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதால் மாணவரின் செவித்திறன் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

போக்குவரத்து வீதிமீறல் இருந்தால் வழக்குப் பதிவு செய்ய வேண்டும தவிர தாக்குவது எந்தவகையில் நியாயம் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி தொடர்ந்து கேள்வியெழுப்பிய நிலையில், புகார் கொடுத்தால் உரிய விசாரணை நடத்தப்பட்டு சம்மந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...