பாதுகாப்பு வேண்டி கோவையில் காதல் ஜோடி தஞ்சம்

கோவை, டிசம்பர் 8

பாதுகாப்பு கேட்டு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் நிது (28) தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுனராக பணி புரிகிறார். 

அதே பகுதி பகுதியை சேர்ந்தவர் பிளசி (21). பொறியியல் பட்டதாரியான இவரும் நிதுவும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர்.

இவர்கள் காதலுக்கு இருவரது வீட்டில் இருந்தும் எதிர்ப்பு வந்ததால் கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

இந்த நிலையில், தங்கள் உயிருக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்று கோரி இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இருவரும் தஞ்சமடைந்தனர்.



இது தொடர்பாக நிது செய்தியாளர்களிடம் கூறுகையில், 'நாங்கள் இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால் எங்கள் வீடுகளில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இருவரும் கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி போத்தனூர் முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டோம். 

அப்போது முதல் எங்கள் வீடுகளில் இருந்து எங்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது. இதனால் எங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க கோரி காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளோம்'என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...