முன்னாள் காதலியை அபகரித்ததால் நடந்த கொலையை லவ் ஜிகாத் என மாற்றிய கொலையாளி - திடுக்கிடும் தகவல்



டிசம்பர் 7




வடமாநிலத்தில் லவ் ஜிகாத் பெயரை சொல்லி, தனது முன்னாள் காதலியுடன் பழகிய வாலிபரை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் முகமது பட்டா சேக். இவர், ராஜஸ்தானில் தங்கி பணி புரிந்ததாக தெரிகிறது. முகமதுவை ஒருவர் கோடாரியால் கடுமையாகத் தாக்கி பின்னர் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்து எரித்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். 



அதில், இந்தச் சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சாமண்ட் மாவட்டத்தில் தேவ் சாலையில் உள்ள ராஜ்நகரில் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், பாதி எரிந்த நிலையில் இருந்த சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் இருந்து கோடாரி மற்றும் இருசக்கர வாகனத்தை போலீஸார் கைப்பற்றினர். இதுகுறித்து ராஜஸ்தான் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வீடியோவில் ஒருவர், முகமதுவை கோடாரியை கொண்டு கடுமையாகத் தாக்குகிறார். தாக்குதலுக்குள்ளான முகமது தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறார். மீண்டும் தொடர்ந்து அந்த நபர் தாக்குகிறார். இதனை மற்றொருவர் வீடியோ பதிவு செய்கிறார். தாக்குதலுக்குள்ளான முகமது மயக்கமடைந்து கீழே விழுகிறார். பின்னர், அவர் மீது அந்த நபர் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்து எரிக்கிறார். இந்தக் கொடூர காட்சியை முழுமையாகப் படம் பிடித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து மற்றோரு வீடியோவை பதிவிட்ட அந்த நபர், அதில் லவ் ஜிகாதில் இருந்து சிறுமியை காப்பாற்றவே இப்படிச் செய்ததாக தனது குற்றத்தை நியாயப்படுத்தி ஒரு வீடியோ பதிவையும் வெளியிட்டிருந்தார். 

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தினர். குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி ஷம்பூநாத் ரைகேர் இன்று காலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரனை நடத்தியதில், ஷம்பூநாத்தின் முன்னாள் காதலியுடன் முகமது பட்டா பழகி வந்ததால், இந்த கொலை நடந்து உள்ளது. ஆனால், இதனை லவ் ஜிகாதில் இருந்து சிறுமியை காப்பாற்றவே இப்படி செய்ததாகக் கொலையாளி வீடியோவில் பதிவு செய்து இருந்தது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...