பரோல் விவகாரம் : தமிழக அரசின் குற்றச்சாட்டுக்கு உயர்நீதிமன்றத்தில் நளினி விளக்கம்

பரோல் வழங்கினால் வெளிநாடு தப்பிச் சென்று விடுவேன் என்ற தமிழக அரசின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக நளினி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தமது மகளின் திருமண ஏற்பாடுகளைக் கவனிக்க 6 மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் அவர் வெளிநாடு தப்பிச் சென்று விடக்கூடும் என்று கூறி பரோல் வழங்க முடியாது எனத் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தற்போது நளினி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், கடந்த 2014-ம் ஆண்டு தம்மை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால், இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் தான் விடுதலைப் பெற முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தம்மை விடுதலை செய்ய முடிவெடுத்த தமிழக அரசு, தற்போது பரோல் வழங்க மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும்,  இந்த வழக்கில் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கியதைப் போலவே, தமக்கும் 6 மாதம் பரோல் வழங்க வேண்டும் என நளினி கேட்டு கொண்டுள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...