நாளை முதல் இருவழிப் பாதையாகிறது புரூக்பாண்ட் சாலை

கோவை, டிசம்பர் 8

நாளை முதல் கோவை புரூக் பாண்ட் சாலை இருவழிப் பாதையாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

கோவை அவினாசி சாலை மேம்பாலத்தில் இருந்து வடகோவை மற்றும் மேட்டுப்பாளையம் சாலைக்கு செல்லும் பிரதான சாலையாக இருந்த புரூக்பாண்ட் சாலை ஒரு வழிப்பதையாக மாற்றப்பட்டது. 

இந்த மாற்றத்தால் அவினாசி சாலையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் பூ மார்க்கெட் வழியாக சென்று மேட்டுப்பாளையம் சாலையை அடைய வேண்டி இருந்தது. இதனால் பூ மார்க்கெட் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. 

இதை தொடர்ந்து, புரூக்பாண்ட் சாலை மீண்டும் இருவழிப்பாதையாக மாற்றப்பட உள்ளது. 

இது குறித்து போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் S.முருகன் கூறுகையில், புரூக்பாண்ட் சாலையை இருவழிப்பாதையாக மாற்றுவது குறித்து மாநகர காவல்துறை ஆணையர் K.பெரியய்யா மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் ஆகியோர் நேற்று மாலை அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து, பொக்லைன் இயந்திரங்களை கொண்டு சாலை சீரமைக்கப்பட்டது. செண்டர் மீடியன் கற்களை சாலைகளின் நடுவே அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.



நாளை காலை 7 மணி முதல் புரூக்பாண்ட் சாலை இருவழிப்பாதையாக மாற்றி திறக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

இந்த புரூக்பாண்ட் சாலை இருவழிப்பாதையாக மற்றப்படும் போது பூ மார்க்கெட் பகுதியிப் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...