ஜெ., மரணம் விவகாரம்: விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை நீட்டிக்கத் தமிழக அரசுக்குக் கோரிக்கை

டிசம்பர் 8

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்திற்குக் கலச மஹாலில் அலுவலகம் ஒதுக்கப்பட்டு, டிசம்பர் 25 வரை 3 மாத அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.. திமுக வழக்கறிஞர் சரவணன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கணவர் மாதவன் பேட்ரிக், மருத்துவர் சிவக்குமார், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும், சிலருக்கு சம்மன் அனுப்பியுள்ளதால், அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே, ஆணையத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் போதுமானதாக இல்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க வேண்டும் எனத் தமிழக அரசின் பொதுத்துறைக்கு ஆறுமுகசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...