டிச., 25-ம் தேதி குல்பூஷன் ஜாதவை சந்திக்கக் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் அனுமதி


டிசம்பர் 08

பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவை, டிசம்பர் 25 ஆம் தேதி சந்திக்க அவரது குடும்பத்தினருக்கு அந்நாடு அனுமதி அளித்துள்ளது.

உளவு பார்த்ததாகக் கூறி இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவை சிறைபிடித்த பாகிஸ்தான், அவருக்கு மரண தண்டனை விதித்தது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா, இந்த விவகாரத்தைச் சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்துச்சென்றது. இதையடுத்து, குல்பூஷன் ஜாதவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கச் சர்வதேச நீதிமன்றம் தடை விதித்தது. இதனிடையே, பாகிஸ்தான் சிறையில் வாடும் குல்பூஷன் ஜாதவை சந்திக்க அவரது மனைவி மற்றும் தாயாருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்தக் கோரிக்கையை ஏற்றுள்ள பாகிஸ்தான், வரும் டிசம்பர் 25 ஆம் தேதி குல்பூஷன் ஜாதவை அவரது மனைவி மற்றும் தாயார் சந்திக்க அனுமதி அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் முகம்மது பைசல் தனது வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். குல்பூஷன் ஜாதவை அவரது மனைவி மற்றும் தாயார் சந்திக்கும் போது இந்திய தூதரக அதிகாரிகளுடன் உடன் செல்ல அனுமதி அளிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

Newsletter

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...