கோவில்களை இடிக்கப் போவதாகக் கூறிய திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரிக்கை

கோவை, டிசம்பர் 09

கோவில்களை இடிக்கப் போவதாகக் கூறிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

கேரளாவில் இருந்து சேலம் செல்லும் வழியில் கோவை ரயில் நிலையத்தில் பாஜக நிர்வாகிகளை அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளிக்கையில், சிவன் கோவில் உள்ளிட்ட அனைத்துக் கோவில்களையும் இடிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசி இருப்பது மதக் கலவரத்தை தூண்டும் செயலாகும். ஜிகாதிகளின் பின்னால் மறைந்து கொண்டு அவர் பேசுகிறார்.

கரூர், மாயவரத்தில் நடந்ததை திருமாவளவன் நியாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு தனது சமூக பெண்களைத் தவிர்த்து மற்ற சமூக பெண்களை இழிவாக பேசியவர் திருமாவளவன். கடந்தாண்டு அவர் பெண்களைப் பற்றி பேசியதை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஏற்றுக்கொள்கின்றரா..?

 கோவில்களை இடிப்போம் எனக் கூறி சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படும் திருமாவளவனை குண்டர் சட்டத்தில் தமிழக அடைக்க வேண்டும். மேலும், புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமியைப் போல நல்ல விசயங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திருமாவளவன் சொல்லி கொடுப்பதில்லை. கடந்த ஆண்டு பெண்களை திருமாவளவன் இழிவாகப் பேசியது நிச்சயம் ஆர்.கே.நகர் தேர்தலில் எதிரொலிக்கும். என்றார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...