கோவை கடற்படையை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தபெதிக-வினர் கைது


கோவை, டிசம்பர் 09

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களைப் பாதுகாக்கத் தவறிய இந்திய கடற்படையைக் கண்டித்து ரெட் பீல்ட்ஸ் சாலையிலுள்ள கடற்படை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.



ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் காணாமல் போகியுள்ளனர். இவர்களைக் காப்பாற்ற தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், அவினாசி சாலையில் இருந்து கப்பற்படை அமைந்துள்ள சாலையில் பேரணியாகச் சென்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். 

அப்போது, மீனவர்களைக் காப்பற்ற மத்திய, மாநில அரசு தவறி விட்டதாகவும், பத்து நாட்கள் ஆகியும் முழுமையாக மீனவர்களை மீட்க முடியாத மத்தியஅரசு, கப்பற்படையை இழுத்து மூட வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பினர்.



மீனவர்களைக் காப்பாற்றத் தவறிய மத்திய அரசு, கன்னியாகுமரி மாவட்டத்தைப் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க மறுத்து வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார். தமிழ்ஈழப் படுகொலை நடந்த போது இலங்கைக்குப் போர் கப்பல் கொடுத்த மத்திய அரசு, மீனவர்களைக் காப்பாற்ற முன் வரவில்லை என்றும், மாநில அரசு இறந்த மீனவர்களுக்கு ரூ. 20 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். 

இதனிடையே, குஜராத் மீனவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் மத்திய அரசு, இது ஜனநாயக நாடு சாதி மதத்திற்கு அப்பாற்பட்டது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் பாகுபாடு பார்க்கக்கூடாது எனத் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தெரிவித்தார்.

Newsletter

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...