குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சுற்றித்திரியும் காட்டுயானைகள் - வாகன ஓட்டிகள் பீதி


டிசம்பர் 09

குன்னுார் - மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் பல்வேறு இடங்களில் காட்டுயானைகள் முகாமிட்டிருப்பதால், வனத்துறையினர் தீவிரக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

நீலகிரி மாவட்டம் குன்னுார் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் தனியாருக்கும் சொந்தமான தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வனத்துறையினருக்குச் சொந்தமான அடர்ந்த வனப்பகுதிகள் நிறைந்து காணப்படுகின்றன. வனத்துறைக்குச் சொந்தமான பகுதிகளில் காட்டெருமைகள், யானைகள் போன்ற வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி, தனியார் தேயிலைத் தோட்டங்களில் சுற்றித் திரிகின்றன. சில நேரங்களில் குன்னுார் - மேட்டுப்பாளையம் மலைப்பாதைக்கு வந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன.

இந்த நிலையில், குன்னுார் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால், குன்னுார் - மேட்டுப்பாளையம் மலைப்பாதை ஓரத்தில் பசுமையான கோரை புற்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இந்தப் புற்களை உண்பதற்காக யானைகள் கூட்டம் கூட்டமாகப் படை எடுக்கத் துவங்கியுள்ளன. பர்லியார் பகுதியில் 2 காட்டுயானைகளும், ‌கோழிக்கரை கிராமத்தில் ஒற்றை யானையும், கே.என்.ஆர் பகுதியில் 3 காட்டுயானைகளும் முகாமிட்டுள்ளன. இந்தக் காட்டுயானைகள் எந்த நேரத்திலும் சாலைக்கு வரக்கூடும் என்பதால் வனத்து‌றையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாகன ஒட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...