வாகன ஓட்டிகளுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய நீலகிரி போலீஸார்

டிசம்பர் 09

நீலகிரி மாவட்டத்தில், வாகன ஓட்டிகளுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டனர். 

குன்னூரில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.முரளிரம்பாவின் உத்தரவின் பேரில், குன்னூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அ.முத்தமிழ் அறிவுறுத்தலின்படி, குன்னூர் நகரக் காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ் மற்றும் காவல்துறை துணை ஆய்வாளர் அசோக்குமார் ஆகியோர் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு அளித்தனர். 

இந்த விழிப்புணர்வின் போது, இருசக்கர வாகன ஓட்டிகளிடம், அதிவேகமாகப் பயணித்தல், குடிபோதையில் வாகனம் இயக்குதல், அதிக பாரம் ஏற்றுதல், வாகனம் ஓட்டும்போது தொலைப்பேசி பயன்படுத்துதல், சாலை விதிகளை மீறுதல், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர்.

இந்த விழிப்புணர்வின் போது உடன் காவல்துறை துணை ஆய்வாளர்கள் ரகுவரன், திரு. ஜான் மற்றும் திரு. ஜெயக்குமார் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...