உதகை மலை ரயிலில் திடீர் கோளாறு : அடிப்படை வசதிகளின்றி வனப்பகுதியில் பரிதவித்த சுற்றுலாப் பயணிகள்

டிசம்பர் 09

குன்னுார் - மேட்டுப்பாளையம் மலை ரயிலின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறால், நடுவழியில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் சுற்றுலா பயணிகள் பரிதவித்தனர். 

பாரம்பரிய சின்னமாக உள்ள நீலகிரி மலை ரயில், யுனெஸ்கோ அந்தஸ்து பெற்றுள்ளது. இந்த மலை ரயிலில் பயணம் செய்ய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புகிறன்றனர். மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னுார் வரை பழமை மாறாத பர்னஸ் ஆயில் நீராவி என்ஜின் மூலம் நான்கு பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 7:20 மணிக்குப் புறப்பட்டு குன்னுாரை 10:30 மணிக்கு வந்து அடைகிறது. 



இந்த நிலையில் இன்று காலை மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்பட்ட மலை ரயில் ஹில்குரோவ் அருகே வந்தடைந்ததது. அப்போது, மீண்டும் அங்கிருந்து புறப்பட்ட போது, திடீரென என்ஜினில் இருந்து புகையும், நெருப்பும் கிளம்பியது. இதனால், என்ஜன் டிரைவர் ரயிலை இயக்காமல், சாதுர்த்தியமாக அங்கேயே நிறுத்தினார். பின்னர், குன்னுார் ரயில் நிலையத்திற்குத் தகவல் கொடுத்து, அங்கிருந்து மாற்று என்ஜன் அப்பகுதிக்குக் கொண்டுவரப்பட்டது. 



இதனைத்தொடர்ந்து, மலை ரயில் நடுக்காட்டில் நின்றதால் 143 சுற்றுலாப் பயணிகள் உணவு தண்ணீர் இன்றி தவித்தனர். மேலும், என்ஜினில் அதிக வெப்பம் ஏற்பட்டதால் என்ஜினிலிருந்து புகைமூட்டமும், தண்ணீரும் வெளியேறியது. இதனால், லோகோ பைலட் பூபதி, உதவி லோகோ பைலட் சதீஷ் மற்றும் ஜெனரேட்டர் ஆப்‌ரேட்டர் வினோத் ஆகியோருக்கு முச்சுத்திணறல் ஏற்பட்டது. மேலும், நீராவித் தண்ணீர் மேல்பட்டதில் மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு 10.30 மணிக்கு வரவேண்டிய மலைரயில், மாற்று என்ஜின் மூலம் பிற்பகல் 2.30 மணிக்கு வந்தடைந்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...