வாய்க்காலில் மூழ்கிய கார் ; 3 பேர் பலி, ஒருவர் மீட்பு


கோவை, டிசம்பர் 10

உடுமலை அருகே பொள்ளாச்சி சாலையில் உள்ள  கெடி மேடு வாய்க்காலில் கார் விழுந்து விபத்து. இதில் ஒருவர் மீட்க்கப்பட்ட நிலையில் 3 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.



கேரளா மாநிலம் எர்ணாகுளம் அங்கவாரியை சேர்ந்தவர்கள் ஆல்பா (19), ஜூதின் ஜோய் (24), துபாய் ஜாக்சன் (21), அமல் (20), மற்றும் லி ஜோ (27). நண்பர்களான இவர்கள் கடந்த 7-ம் தேதி மூணாறுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை 4.30 மணிக்கு மூணாறில் இருந்து கிளம்பி பொள்ளாச்சி நோக்கி காரில் வந்துள்ளனர். சுமார் காலை 7.15 மணியளவில் கெடி மேடு வாய்க்கால் அருகில் வரும் போது நிலை தடுமாறிய கார் பாலத்தில் மோதி வாய்க்காலில விழுந்தது. 

11 அடி ஆழமுள்ள வாய்க்காலில் மூழ்கிய காரில் இருந்து வெளியே வந்த ஆல்பா என்பவரை அங்கு குளித்து  கொண்டிருந்த பால் டேங்கர் லாரியின் டிரைவர் கார்த்திகேயன் என்பவர் காப்பாற்றி கரை சேர்த்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் 3 பேரின் உடல்களை மீட்டனர் ஒருவரை தேடி வருகின்றனர். வாய்க்காலில் விழுந்த காரையும் மீட்டனர் இதனால் உடுமலை பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

 இச்சம்பவம் அங்குள்ள மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...