ஆரோக்கியமான நகரம், ஆரோக்கியமான வாழ்க்கை விழிப்புணர்வு மாரத்தான்

கோவை, டிசம்பர் 10

கோவையில் செயல்பட்டு வரும் கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் "ஆரோக்கியமான நகரம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை" குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கே.எம்.சி.எச் சார்பில் தொடர்ந்து 24-வது முறையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியினை கோவை மாநகர காவல் ஆணையாளர் திரு. கே. பெரியய்யா கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில், சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சூலூர் கே.எம்.சி.எச் மருத்துவமனையில் இருந்து சிட்ராவில் அமைந்துள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனையினை வந்தடைந்தனர் இதனைத்தொடர்ந்து, மாரத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதுகுறித்து கே.எம்.சி.எச் மருத்துவமனை தலைவர் மருத்துவர் நல்ல ஜி பழனிசாமி கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் உடல் ஆரோக்கியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது. நம் அன்றாட வாழ்வில் ஒவ்வொருவரும் உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சியானது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, அதனை கருத்தில் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும் என்றார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...