கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

கோவை, டிசம்பர் 10 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று மதியம் குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று மதியம் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் குடிபோதையில் வந்தார். 

ஞாயிற்றுகிழமை என்பதால் அரசு அலுவலகங்கள் விடுமுறை விடப்பட்டு ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடிகிடந்தது. 

இந்த நிலையில் அந்த நபர்  மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை தனது உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.  அங்கு இருந்த பத்திரிக்கையாளர்கள் அவரை மீட்டு பந்தய சாலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட அந்த நபரிடம் விசாரித்த போது தனது பெயர் செல்வகுமார் என்றும், காந்திபுரம் பகுதியில் சிலர் அவரிடம் இருந்த பணத்தை திருடிச் சென்றதாகவும், இது தொடர்பாக போலீசார் புகார் ஏற்க மறுத்ததால் தீக்குளிக்க முயற்சி செய்ததாகவும் தெரிவித்தார். 

தற்போது அவரை காவல் நிலையத்தில் வைத்துள்ள போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...