பாண்டவர் அணியில் திடீர் விரிசல்: நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியில் இருந்து பொன்வண்ணன் ராஜினாமா

டிசம்பர் 11

நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியைத் திடீரென பொன்வண்ணன் ராஜினாமா செய்திருப்பது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் கட்சிகளில் நடக்கும் மாற்றங்களைவிட நடிகர் சங்கத்தில் நடக்கும் மாற்றங்கள் சற்று அதிகம். நாள்தோறும் பரபரப்பான ஏதாவது ஒரு விஷயங்கள் நடிகர் சங்கத்தில் நடந்துவருகிறது. அந்த வகையில், நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான விஷால், ஆர்.கே.நகர் தேர்தலில் மனுத்தாக்கல் செய்யப்போவதாகத் தகவல்கள் வந்ததிலிருந்து சினிமா உலகைச் சேர்ந்த சிலர் விஷாலுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி வந்தனர். 

இதனிடையே, நேற்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக்குழு கூட்டம் ஆரம்பித்த சில மணி நேரங்களில் நிறுத்தப்பட்டது. கூட்டத்தைப் பாதியில் நிறுத்தியதைக் கண்டித்து நடிகர் சேரன், டி.ராஜேந்தர், சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் தங்கள் எதிர்ப்பைக் கோபமாகப் பத்திரிகையாளர் முன்னிலையில் பதிவு செய்தனர்.

இந்நிலையில், நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான நடிகர் பொன்வண்ணன், சங்கப் பொறுப்பில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார். விஷாலின் பாண்டவர் அணியிலிருந்த பொன்வண்ணன் திடீரெனப் பொறுப்பிலிருந்து விலகியிருப்பது திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...