திருமாவளவனின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற பாஜகவினர் - ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

கோவை, டிசம்பர் 11

சட்டம், ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையில் பேசியதாகக் கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் உருவ பொம்மையை பாஜகவினர் எரிக்க முயன்றதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றம் ஏற்பட்டது.



பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6-ம் தேதியன்று, தலித் இஸ்லாமியர் எழுச்சி நாளாகவும், அம்பேத்கர் நினைவு தினமும் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, கடந்த வாரம் சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்து கோயில்களை இடித்துவிட்டு புத்த கோயில்களைக் கட்ட வேண்டும் எனப் பேசியதாக செய்திகள் வெளியாகின. 

அவரின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உள்ளிட்ட இந்து கட்சியினர் மற்றும் அமைப்பினர் ஆங்காங்கே கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

இதனிடையே, திருமாவளவனின் பேச்சு இந்துக்களை அவமதிக்கும் செயல் எனவும், இந்துக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதாகவும் கூறி பாரதிய ஜனதா கட்சி அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவினர், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது, அவர்கள் விசிக தலைவரின் உருவ பொம்மையையும் எரிக்க முயன்றனர். 

இதனைத்தொடர்ந்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவர்களிடமிருந்து உருவ பொம்மையை பறித்தனர். பின்னர், கண்டன கோஷங்களை எழுப்பிய பாஜக-வினர், சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் முயற்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் ஈடுபடுவதாகவும், மதக்கலவரத்தை உருவாக்கும் வகையில் அரசியல் செய்கிறார் எனவும் குற்றம்சாட்டினர். மேலும், திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...