வீட்டுப்பத்திரத்தை வைத்து மோசடி: நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை, டிசம்பர் 11

ரூ.40 லட்சம் மதிப்புள்ள வீட்டுப் பத்திரத்தை வைத்து மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.



புலியகுளம் பகுதியைச் சேர்ந்த ஜோதி என்பவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது, செளரிபாளையம் பகுதியைச் சேர்ந்த பாஸ்டான் என்னும் துணிக்கடை உரிமையாளர் ராஜேந்திரன் என்பவரிடம் வீட்டுப் பத்திரத்தை வைத்து ரூ.3 லட்சம் கடன் பெற்றேன். இதில், அசலும், வட்டியையும் சேர்த்து ரூ. 12 லட்சம் திரும்பச் செலுத்திய நிலையிலும், வீட்டுப் பத்திரத்தை தர அவர் மறுத்து வருகிறார். 

மேலும், ரூ. 40 லட்சம் மதிப்பிலான தனது வீட்டு பத்திரத்தில் தன்னை ஏமாற்றி கையெழுத்து வாங்கிய ராஜேந்திரன், அதனை முறைகேடாகப் பயன்படுத்தி கார்ப்பரேசன் வங்கியில் கடன் பெற்றுள்ளார். பத்திரத்தை திரும்பக் கேட்ட போது, தனது மகன் ஆல்வின் ஜெரால்டை அடியாட்களை வைத்துத் தாக்கினார். இதுகுறித்து சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு பத்திரத்தை மீட்டுக் கொடுக்க ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...