முறையாகக் குடிநீர் வழங்க வலியுறுத்தி காலிக் குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட பொதுமக்கள்

கோவை, டிசம்பர் 11

செட்டிபாளையம் பகுதிக்கு முறையாகக் குடிநீர் விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



செட்டிபாளையம் அருகே உள்ள கோவை கார்டன் பகுதியில் சுமார் 55-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், உள்ளூர் திட்டக் குழும அங்கீகாரம் பெற்ற வீட்டுமனை இடத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இப்பகுதியில், ஆழ்குழாய் அமைத்தும் தண்ணீர் கிடைக்கப் பெறவில்லை. இதுகுறித்து செட்டிபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இந்நிலையில், முறையாகக் குடிநீர் விநியோகிக்கக் கோரி செட்டிபாளையம் பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், கோவை கார்டன் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகளவில் உள்ளது. இது தொடர்பாக மனு அளித்தால் அதிகாரிகள் அலட்சியமாகப் பேசுகின்றனர். தண்ணீர் கிடைக்காமல் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வருகிறோம். மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...