டிசம்பர் 17-ல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள்

கோவை, டிசம்பர் 11

தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் ஜவகர் சிறுவர்மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் வரும் டிசம்பர் 17ம் தேதி நடைபெறுகிறது. 

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் ஜவகர் சிறுவர்மன்றம் சார்பில் வரும் டிசம்பர் 17ம் தேதியன்று 10 மணியளவில் மலுமிச்சம்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய பிரிவுகளின் கீழ் நடைபெறும் இப்போட்டியில் 6-ஆம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்கலாம். இதில், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை ஜூனியர் பிரிவாகவும், 9 முதல் 11-ம் வகுப்பு வரை சீனியர் பிரிவாகவும் போட்டிகள் நடைபெறும்.

ஓவியத்தாள், வண்ணங்கள், தூரிகைகள் உட்பட பங்கேற்பாளர்களுக்குத் தேவையானவற்றை அவர்களே கொண்டு வர வேண்டும். போட்டி துவங்கும் முன் தலைப்புகள் அறிவிக்கப்படும். குறிப்பாக, கிராமிய நடனப் போட்டியிலும், திரைப்படப் பாடல்களுக்கான நடனம் மற்றும் குழு நடனத்திற்கு அனுமதி இல்லை. கிராமிய நடனத்தில் முறையான கரகம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்களாக இருக்க வேண்டும்.

பங்குபெறும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். முதல் பரிசு பெறும் சிறார்களுக்கு அரசின் செலவில் மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெறுவர். மேலும், விபரங்களுக்குக் கோவை மாவட்ட ஜவகர் சிறுவர்மன்ற திட்ட அலுவலரை 97515 - 28188 அல்லது கலைப் பண்பாட்டுத் துறையின் கோவை மண்டல அலுவலகத்தை 0422- 22610290 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...