கட்அவுட், பேனர் கலாச்சாரத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு

டிசம்பர் 11

உயிருடன் இருப்பவர்களுக்காக கட்அவுட், பேனர்களை வைப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கச் சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

கட்அவுட், பேனர்களில் உயிருடன் இருப்பவர்களின் படங்களை பயன்படுத்தச் சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை, இன்று (டிச.,11) விசாரித்த நீதிபதிகள், உயிருடன் இருப்பவர்களின் படங்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்தனர். மேலும், கட்அவுட், பேனர் வைக்க அனுமதிக்கும் நடைமுறையை மறுஆய்வு செய்யும் நேரம் வந்து விட்டதாகவும், வருவாய் நோக்கத்திற்காக மட்டுமே பேனர், கட்அவுட்கள் வைக்க அனுமதிக்கப்படுகிறதா என அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

 

தொடர்ந்து, கேரளாவில் தேர்தல் நேரங்களில் மூங்கில் தட்டிகளில் மட்டுமே பேனர் வைக்கப்படுவதாகவும், பேனர், கட்அவுட் வைப்பதால் மக்கள் அவதிப்படுவதை ஏன் கருத்தில் கொள்ளவில்லை என நீதிபதிகள் கேட்டுள்ளனர். பின்னர், தலைமை நீதிபதி விசாரணைக்காக இவ்வழக்கு வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...