குடிமையியல் பற்றிய விழிப்புணர்வு பயிற்சிகளில் சிறப்பாகச் செயல்பட்ட மாணவிகளுக்குப் பரிசு வழங்கிக் கவுரவிப்பு


கோவை, டிசம்பர் 11

மாநகராட்சி பள்ளிகளுக்கான ”பாலஜனகிரஹா 2017” குடிமையியல் பற்றிய விழிப்புணர்வு பயிற்சிகளில் சிறந்து விளங்கிய மாணவிகளுக்கு மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். 

அறம் பொதுநல அறக்கட்டளை மாநகராட்சியுடன் இணைந்து தொடர்ந்து 2-வது ஆண்டாக ”பாலஜனகிரஹா 2017” என்ற குடிமையியல் பற்றிய விழிப்புணர்வு பயிற்சித் திட்டத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மாநகராட்சி பள்ளிகளில் 8-ம் வகுப்பைச் சேர்ந்த 150 மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி வருகின்றனர். இதில், மாணவ, மாணவியர்களுக்கு நமது, உரிமைகள், நமது நகரத்தின் கட்டமைப்பு, போக்குவரத்து, அரசாங்கம், நமது அரசியலமைப்பு உரிமைகள், வளங்கள் பாதுகாத்தல், பேரழிவு மேலாண்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைப் பற்றி ஒவ்வொரு பள்ளிகளிலும் 25 மணிநேர வகுப்புகள் நடைபெற்றது. 



அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பான 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் பள்ளிக்கு அருகிலிருக்கும் சாலையை ஆய்வு செய்து, அதில் இருக்கும் தேவைகள், பிரச்சனைகள், தீர்வுகள் குறித்து ஒரு விளக்கவுரை பதிவு செய்து கணினியில் காட்சி விளக்கப் படங்களுடன் விளக்கிக் காட்டினர். மேலும், நடுவர்கள் சில கேள்விகள் கேட்டு அவர்களின் பேசும் திறமை மற்றும் புரிந்துணர்தல் ஆகியவற்றை பரிசோதித்தனர். இதில், சிறப்பாக விளக்கிக் காட்டிய எஸ்.ஆர்.பி அம்மணியம்மாள் பள்ளி முதலிடமும், ராமசாமி நகர்பள்ளி 2-ம் இடமும், செல்வபுரம் பெண்கள் பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றது. 



பாலஜனகிரஹா திட்டத்தினால் ஒவ்வொரு குழந்தையையும் நாளைய பங்கேற்கும் குடிமக்களாக உருமாற்றம் பெற்று அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உறுதுணையாக அமையும். சிறுவயதில் இதை அவர்கள் உணர்ந்தால் வருங்கால குடிமக்கள் மிகவும் பொறுப்புள்ளவர்களாக நாட்டின் மேம்பாட்டிற்கு செயல்படுவார்கள் என அறம் பொதுநல அமைப்பினர் தெரிவித்தனர். 

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...