இத்தாலியில் திருமணம் செய்து கொண்ட விராட்கோலி - அனுஷ்கா : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

டிசம்பர் 12

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவிற்கும் இத்தாலியில் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.



இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர். டெலிவி‌ஷன் விளம்பரம் ஒன்றின் படப்பிடிப்பில் முதல்முறையாக இருவரும் சந்தித்தபோது காதல் ஏற்பட்டது. முதலில், மறைமுகமாக இருந்த இந்தக் காதல் பின்னர் வெளிப்படையாக இருந்தது. 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக விராட் கோலி இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டியில் ஓய்வு கேட்டு இருந்தார். இவர்களது திருமணம் இத்தாலியில் நடைபெறும் என்று யூகங்கள் வெளியானது. ஆனால் எந்தத் தேதியில் திருமணம் என்பது தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில், விராட் கோலி - அனுஷ்கா சர்மா திருமணம் இத்தாலியில் உள்ள மிலன் நகர் அருகே டஸ்கேனியில் உள்ள சொகுசு விடுதியில் நேற்று நடந்தது. இந்து முறைப்படி இந்தத் திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இந்தத் தகவலை விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் டுவிட்டரில் தெரிவித்தனர்.

இது தொடர்பாக இருவரும் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் “நாங்கள் இருவரும் என்றென்றும் அன்புடன் இருப்போம் என உறுதி எடுத்துள்ளோம். இந்த அழகான நாள் எங்களது ரசிகர்கள், நலம் விரும்பிகளின் வாழ்த்துக்களால், மேலும் சிறப்பானதாக அமைந்துள்ளது. எங்களது வாழ்க்கை பயணத்தில் முக்கிய அங்கமாகத் திகழும் ரசிகர்களுக்கு நன்றி” என்று தெரிவித்திருந்தனர்.

விராட் கோலி - அனுஷ்காவிற்கு பிரபலங்கள் டுவிட்டர் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப்பச்சன், ஷாருக்கான், அனில்கபூர், ஷாகித்கபூர், அபிஷேக்பச்சன், ரித்தேஷ் தேஷ்முக், ஸ்ரீதேவி, பிரியங்கா சோப்ரா, பிரினிதி சோப்ரா, நேகா துபியா உள்ளிட்ட இந்தி நடிகர்- நடிகைகள் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளளர்.

கோலி- அனுஷ்கா திருமண வரவேற்பு இரண்டு இடங்களில் நடக்கிறது. வருகிற 21-ந்தேதி டெல்லியிலும், 26-ந்தேதி மும்பையிலும் திருமண வரவேற்பு மற்றும் விருந்து நிகழ்ச்சிகள் நடக்கிறது.

டெல்லியில் நடைபெறும் திருமண வரவேற்பில் குடும்ப உறவினர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள். மும்பையில் நடைபெறும் திருமண வரவேற்பில் கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்கிறார்கள்.

டெல்லியில் திருமண வரவேற்பு முடிந்ததும் புதுமண ஜோடி மும்பையில் உள்ள வொர்லி பகுதியில் குடியேறுகிறது. விராட் கோலி மனைவி அனுஷ்காவுடன் தென் ஆப்பிரிக்காவில் புத்தாண்டை கொண்டாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்க தொடரில் அவர் மனைவியையும் உடன் அழைத்துச் செல்கிறார். இந்தியா- தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் ஜனவரி 5-ந்தேதி தொடங்குகிறது.

Newsletter

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...