முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ விசாரணை


டிசம்பர் 12

நிலம் ஒதுக்கியதில் முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தமிழகத்தை சேர்ந்த ஜெயந்தி நடராஜன், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக 28 மாதங்கள் பதவி வகித்தார். அப்போது, ஜார்கண்ட் மாநிலம் சிங்பும் மாவட்டத்தில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை, தனியார் நிறுவனத்திற்கு வழங்கி உள்ளார். அவருக்கு முன்பு, துறையின் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ், நிலம் ஒதுக்க மறுத்து உள்ளார். ஆனால், ஜெயந்தி நடராஜன் அமைச்சராக இருந்த போது, நிலம் ஒதுக்கியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து, சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. சில மாதங்களுக்கு முன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில், இன்று (டிச., 12) மீண்டும் சென்னையில் உள்ள ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, வருமானவரித்துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

Newsletter

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...