இந்த ஆண்டுக்கான அன்னை தெரசா விருதைப் பெற்றார் நடிகை பிரியங்கா சோப்ரா

டிசம்பர் 12

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு சமூக நீதிக்காக இந்த ஆண்டுக்கான அன்னை தெரசா நினைவு விருது வழங்கப்பட்டது.

நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் போரினால் சீரழிந்துள்ள சிரியா நாட்டுக்குச் சென்றார். அங்கு அகதிகளாக உள்ள குழந்தைகளை சந்தித்து அவர்களிடம் உரையாடினார். இதுபோன்ற சமூக விஷயங்களில் ஆதரவு தரும் வகையில், செயல்பட்டதற்காக அவருக்கு இந்த அன்னை தெரசா நினைவு விருது வழங்கப்பட்டது.

பல்வேறு பொதுநல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டவர் என அறியப்படும் பிரியங்கா சோப்ரா, யூனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராகவும் உள்ளார். இந்த விருதினை அவருக்குப் பதிலாக அவரது தாயார் மது சோப்ரா பெற்று கொண்டார். 

இதுபற்றி அவரது தாயார் கூறுகையில், பிரியங்காவுக்கு பதிலாக இந்த விருதினை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். அதிக இரக்கம் மற்றும் கருணை தன்மை கொண்டுள்ள ஒரு குழந்தையை பெற்றதற்காக நான் நிறைந்த பெருமை கொள்கிறேன்.நீங்கள் எவ்வளவு கொடுக்கிறீர்களோ அந்த அளவிற்குப் பெறுவீர்கள் என்ற உண்மைக்கு எடுத்துக்காட்டாக அவள் இருக்கிறாள். அவள் ஒரு குழந்தையாக இருந்தபொழுதும், அன்னை தெரசாவால் ஈர்க்கப்பட்டு இருக்கிறாள். அவள் பரேலியில் உள்ள பிரேம் நிவாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகிறாள். எனக் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் கிரண்பேடி, அன்னா ஹசாரே, ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுதா மூர்த்தி, மலாலா யூசப்சை, சுஷ்மிதா சென் மற்றும் பில்கீஸ் பனோ எதி ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...