கண்மாயில் விழுந்த குட்டியானை : பாசப் போராட்டத்தால் வாகன ஓட்டிகளை விரட்டிய தாய் யானை


டிசம்பர் 12

மேட்டுப்பாளையம் அருகே குட்டியானை கண்மாயில் விழுந்ததால், பரிதவித்த பெண்யானை சாலைகளில் சென்ற வாகனங்களைத் துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சுண்டப்பட்டி பிரிவு வனபத்திரகாளியம்மன் கோவிலை அடுத்து தேக்கம்பட்டி சாலையோரம், பம்ப் ஹவுஸ் அருகில் ஒரு பெண் யானை சாலையில் செல்பவர்களை விரட்டியது. மேலும், வாகனங்களையும் சேதப்படுத்தியது. இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், பொதுமக்களின் உதவியுடன் யானையை அருகில் உள்ள நெல்லிமலை வனப்பகுதிக்குள் விரட்டினர். 



 

இருப்பினும், மீண்டும், மீண்டும் சாலைப்பகுதிக்கே யானை வந்ததால், வனத்துறையினர் சந்தேகமடைந்தனர். பொதுமக்கள் உதவியுடன் அப்பகுதி முழுவதும் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு மாதம் மதிக்கத்தக்க யானைக்குட்டி பழைய வாய்க்காலுக்குள் விழுந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்காரணமாகவே, யானை ஒரே பகுதியில் திரிந்ததுடன், சாலையில் செல்பவர்களை துரத்தியது தெரியவந்தது. 

இதையடுத்து, உடனடியாக குட்டி யானையை மீட்டு இளநீர், குளுக்கோஸ் போன்ற ஊக்க பானங்களைக் கொடுத்து, நெல்லிமலை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டது. 

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...