அடுத்தாண்டு முதல் நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரி வினாத்தாள் : சி.பி.எஸ்.இ அறிவிப்பு

டிசம்பர் 12

2018-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் அறிமுகப்படுத்தப்படும் என உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது. 

மருத்துவ படிப்புகளுக்காக கொண்டு வரப்பட்ட நீட் தேர்வில் இந்தி கேள்வி தாள்கள் எளிதாகவும், தமிழில் வழங்கப்பட்டுள்ள கேள்வித்தாள் கடினமாக இருந்ததாகவும், மாறுபட்ட கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு குறித்த விசாரணையில் பதிலளித்துள்ள மத்திய பள்ளி கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ), அடுத்தாண்டு முதல் எந்த குளறுபடியும் இல்லாமல் நீட் தேர்வு நடத்தப்படும் என்று எழுத்துப்பூர்வ அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. இந்தி மற்றும் ஆங்கில வழியிலேயே அதிகமானார் எழுதுவதாகவும், பிராந்திய மொழிகளில் குறைவான பேர் எழுதுவதால் இந்தக் கோளாறு நேர்ந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் கொண்டு வரப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...