ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரணம் வழங்குமாறு மத்திய அரசிடம் ஆளுநர் கோரிக்கை

டிசம்பர் 12

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோரிக்கை விடுத்துள்ளார். 

டெல்லி சென்ற அவர் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியிடம் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரண நிதி வழங்க வலியுறுத்தியுள்ளார். குமரி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டோர் நிலை குறித்தும் எடுத்துக் கூறினார். மேலும், புயல் நிவாரண நிதி தருமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடமும் தமிழக ஆளுநர் கோரிக்கை வைத்துள்ளார். அதன் பிறகு, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்துப் பேசிய அவர், தென்னிந்திய நதிகளை இணைத்து தமிழகத்துக்கு நீர் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்தார். பின்னர், ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் திரிபுரா ஆளுநர்களுடன் இணைந்து தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்தித்துப் பேசினார். 

முன்னதாக, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழக மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்வதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், டெல்லிக்குச் சென்று மத்திய அரசிடம் ஆளுநர் ஓகி புயலுக்கு நிவாரணமாக நிதி கோரியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...