ஹாசினி மற்றும் தாயை கொலை செய்த தஷ்வந்த் மீது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரமாரி தாக்குதல்


சென்னை

சிறுமி ஹாசினி மற்றும் தாய் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட தஷ்வந்த் மீது பெண்கள் சிலர் கடும் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். பின், ஜாமீனில் வெளியே வந்திருந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாயை கொன்று விட்டு தலைமறைவாக இருந்த நிலையில் மும்பையில் கைது செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட தஷ்வந்த், காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் தாயை கொன்றது ஏன் என்றும், பணம் கொடுக்காமல் இருந்ததால் தந்தையையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் கூறினார். தனது கொலையை ஒப்புக்கொண்டதால் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜராகாததால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து தஷ்வந்த் இன்று செங்கப்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்டார்.

அப்போது நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பெண்கள் அவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். அவர்களிடம் இருந்து தஷ்வந்தை மீட்ட காவல்துறையினர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

பின் வழக்கு குறித்து விசாரித்த நீதிபதி, சிறுமி ஹாசினி மற்றும் தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்தை வரும் 18ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

வழக்கறிஞர் விலகல்:-

இதனிடையே ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு ஆதரவாக ஆஜராகி வாதாடி வந்த வழக்கறிஞர் விஜயகுமார் இந்த வழக்கில் இருந்து விலகி விட்டார். தஷ்வந்திற்காக இனி ஆஜராகப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...