இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதி உதவி - முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை, டிசம்பர் 13

ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி திரு. கே. பழனிசாமி ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி உதவி அறிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிப்பதற்காக ராஜஸ்தானுக்குச் சென்ற போது ஆய்வாளர் பெரியபாண்டி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு இன்ஸ்பெக்டர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெரியபாண்டியின் மரணச் செய்தி தமிழக காவல்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வாளர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதி தரவேண்டும் எனவும், படுகாயம் அடைந்த ஆய்வாளர் முனிசேகருக்கு அரசு செலவில் உரிய உயர் சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதனிடையே, பெரியபாண்டியின் மரணம் குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிவாரணம் அளிக்கப்படும். அவரது இரண்டு மகன்களின் படிப்புச் செலவையும் அரசே ஏற்கும் என்றும் கூறியுள்ளார். மேலும், காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இன்ஸ்பெக்டர் முனிசேகர், தலைமைக் காவலர்களுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் மற்றும் மருத்துவச் செலவை தமிழக அரசு முழுமையாக ஏற்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...