டிசம்பர் மாதத்தில் குளிர் போக போக அதிகரிக்கும்

கோவை, டிசம்பர் 13

இந்த வருடம் டிசம்பர் மாதம் குளிர் தமிழகத்தில் போக போக அதிகரிக்கும் என்று கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆய்வு மையத் தலைவர் எஸ்.பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவையை பொறுத்த வரையில் இரவு நேரங்களில் குளிர் வாட்டி வதைக்கிறது அதே சமயம் பகலில் வெயில் அதிகரித்து காணப்படுகிறது இதனால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

இது குறித்து பன்னீர்செல்வம் கூறியதாவது,

“இந்த வருடம் டிசம்பர் மாதம் பொறுத்த வரையில் கடந்த ஆண்டினை போலவே தான்இருக்கிறது எந்த ஒரு மாறுதலும் இல்லை. தற்போது இரவு நேரங்களில் குளிர் 23 டிகிரி செல்சியஸ் முதல் 25 டிகிரி செல்சியஸ்வரை உள்ளது அதே சமயம் பகல் நேரத்தில் 32 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை பதிவாகி வருகிறது. இது இயல்பான அளவு தான் ஆனால் இந்த குளிர் ஜனவரி மாதம் மூன்றாவது வாரம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது அப்போது இரவு நேரங்களில் குளிர் 19 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும், வெயில் சற்று அதிகரித்து காணப்படலாம்.

இந்த குளிரானது கொண்டக்கடலை மற்றும் காய்கறி வகைகள் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் அதே சமயம் திராட்சை உள்ளிட்ட கொடி வகை செடிகள் பயிரிட்டுள்ள விவிசாயிகளுக்கு நன்மை பயக்காது,”

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...