போக்குவரத்து நிர்வாகத்தினைக் கண்டித்து உக்கடம் பணிமனை முன்பு ஊழியர்கள் போராட்டம்


கோவை, டிசம்பர் 14

பேருந்துகளில் வசூலான கட்டண பணத்தை வாங்க போக்குவரத்து நிர்வாகம் காலம் கடத்துவதாகக் கூறி பணிமனை முன்பு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

கோவை, உக்கடம் இரண்டாவது போக்குவரத்து பணிமனையில், நேற்று மாலை பணி முடித்து திரும்பிய அரசு பேருந்துகளில் வசூலான கட்டணப் பணத்தை செலுத்த பேருந்து ஊழியர்கள் சென்றபோது அதனை வாங்காமல் நிர்வாகம் காலம் கடத்தியுள்ளது. தொடர்ந்து, இன்று காலை வரை வசூலான பணத்தை பெற்றுக் கொள்ளாமல் நிர்வாகம் காக்க வைத்த நிலையில், இதனால் ஆத்திரமடைந்த போக்குவரத்து ஊழியர்கள் பணிமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நிர்வாகம் சார்பில் அந்தப் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறுகையில், இன்று நடைபெறும் காத்திருப்புப் போராட்டத்தில் ஊழியர்கள் பங்கேற்பதை தடுக்கும் விதமாகவே வசூலான பணத்தை பெறாமல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இன்று நடத்தப்படும் காத்திருப்புப் போராட்டத்தில் திரளாகப் பங்கேற்க உள்ளோம் என்றனர்.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...