ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிப்பு

கேரளா, டிசம்பர் 14

கேரள சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை விதித்து எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகேயுள்ள பெரும்பாவூர் பகுதியில், தலித் சமூகத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவியான ஜிஷா கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதியன்று அவரது வீட்டில் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஜிஷா வீட்டின் அருகேயுள்ள ஹாலோ பிளாக்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றிவந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அமிருல் இஸ்லாம் என்பவருக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, காஞ்சிபுரத்தில் பதுங்கியிருந்த அமிருல் இஸ்லாமைக் காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். இது தொடர்பான வழக்கு எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது.

இதனைத்தொடர்ந்து, அமிருல் இஸ்லாம் தான் கொலை செய்தார் என்பது ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவரைக் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும், அவருக்கான தண்டனை விபரத்தினை இன்று (டிசம்பர் 14) எர்ணாகுளம் நீதிமன்றம் அறிவித்தது. அதில், குற்றவாளியான அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.



Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...