சோலார் பேனல் மோசடி வழக்கு: கேரள முன்னாள் முதலமைச்சர் மீது சரிதா நாயர் குற்றச்சாட்டு

கோவை, டிசம்பர் 14

சோலார் பேனல் மோசடி வழக்கில் கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி, தன்னை சிக்க வைத்ததாக நடிகை சரிதா நாயர் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் வடவள்ளி பகுதியில் காற்றாலை அமைத்துத் தருவதாக ரூ.26 லட்சம் மோசடி செய்ததாக கேரள நடிகை சரிதா நாயர் மீது தொடரப்பட்ட வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக சரிதாநாயர் இன்று கோவை 6 -வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால், சாட்சிகள் வராததால், இந்த வழக்கு வரும் ஜனவரி 8-ஆம் தேதிக்கு நீதிபதி ராஜவேல் ஒத்திவைத்தார்.

இதனைத்தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கேரள சோலார் பேனல் வழக்கில் அரசியல் பிரமுகர்கள் உள்ளதால் விசாரணை தாமதமாக நடைபெற்று வருகிறது. கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டியால் தான் இந்த வழக்கில் நான் சிக்க வைக்கப்பட்டுள்ளேன். முழுமையான விசாரணை முடிந்து கண்டிப்பாக உம்மன்சாண்டி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு கூறினார். 

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...