கல்லூரி பயிலும் மாணவ, மாணவியருக்கான கல்விக்கடன் முகாம்

கோவை, டிசம்பர் 14

கோவை மாவட்டத்தில் கல்லூரி படிப்பு பயின்று கொண்டிருக்கும் மாணவ, மாணவியருக்காகக் கல்விக்கடன் முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- தமிழக முதலமைச்சரின் ஆணைப்படி 2016- 2017 ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவியர்கள், அவர்களது மேற்படிப்பைத் தொடரும் வகையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாகக் கோவை மாவட்டத்தில் கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

ஏற்கனவே, பன்னிரெண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு அவர்களது மேற்படிப்பைத் தொடரும் வகையில், கோவை மாவட்டத்தில் இக்கவ்வியாண்டில் வங்கிக்கடனுக்கு மனு செய்து கிடைக்கப்பெறாமல், தற்போது கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் மாணவ, மாணவியருக்காகக் கல்விக்கடன் முகாம் வரும் டிசம்பர் 19ம் தேதியன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட முன்னோடி வங்கியின் உதவியுடன் கோவை, வின்சென்ட் சாலை, கோட்டைமேடு பகுதியிலுள்ள நல்லாயன் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

எனவே, கல்லூரியில் தற்போது பயிலும் மாணவ, மாணவியர்களில் கல்விக்கடன் தேவைப்படுவோர் வங்கிக்கடன் சார்பான விண்ணப்பத்தின் நகல் மற்றும் உரிய ஆவணங்களுடன் முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம். இவ்வாறு ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...