ஹெச். ராஜாவைக் கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது

கோவை, டிசம்பர் 15

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை ஒருமையில் பேசிய பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜாவைக் கண்டித்து கோவையில் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், ஹெச். ராஜாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றவர்களை போலீஸார் கைது செய்தனர். 

காந்திபுரம், திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்தின் போது, தமிழகத்தை விட்டே காவி கும்பலை வெளியேற்றும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் கூறினர். மேலும், தரக்குறைவாகப் பேசிய ஹெச். ராஜாவிற்குக் கண்டனம் தெரிவித்த விடுதலை சிறுத்தைகள்  கட்சியினர்,  அவரை திருமாவளவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். 

போராட்டத்தின் நடுவே, ஹெச். ராஜாவின் உருவபொம்மையை எரிக்க முயன்றதால் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர்,  உருவபொம்மையை போலீஸார் பிடுங்கிச் சென்றனர். இதனையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒரு பெண் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...