ரத்தனபுரி அருகே லாரி மோதி வாலிபர் பலி - குண்டும் குழியுமான சாலையால் நிகழ்ந்த சோகம்

கோவை, டிசம்பர் 15

கோவையில் குண்டும் குழியுமான சாலையில் சென்று கொண்டிருந்த லாரி, நிலைதடுமாறியதில் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 

கோவை மாநகராட்சிக்குட்பட்ட ரத்தனபுரி அருகே உள்ள சங்கனூர் - மேட்டுப்பாளையம் சாலையினை மேம்படுத்தாமல் இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில், சங்கனூர் பகுதியில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது, எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாலிபர் தலை நசுங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி ஒட்டுநரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். தொடர் விபத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், சாலைகளைச் சரிவர பராமரிப்பு செய்யாததால் வாகனப் போக்குவரத்து மிகுந்த புறவழி சாலையான இப்பகுதியில் தொடர் விபத்து ஏற்படுகிறது. அரசு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால், உயிர்பலி அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்பதால் தற்போது போராட்டம் நடக்கிறது. இவ்வாறு கூறினர். 

Newsletter

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...