ஏடிஎம்களில் இரவு 9 மணிக்கு மேல் பணம் நிரப்பும் பணியை மேற்கொள்ளத் தடை : மத்திய அரசு முடிவு

டிசம்பர் 15

இனி ஏடிஎம்களில் இரவு 9 மணிக்கு மேல் பணம் நிரப்பும் பணிக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. 

நாடு முழுவதும் 8 ஆயிரம் தனியார் வேன்கள் மூலம் தினமும் ரூ. 15,000 கோடி ரொக்கப்பணம் ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்பப் பயன்படுத்தப்படுகின்றன. தவிரக் கூடுதலாக ரூ. 5,000 கோடி, தனியார் செக்யூரிட்டி ஏஜென்சிகள் மூலம் பணம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் பணம் கொண்டு செல்லும் வாகனங்களைக் குறி வைத்து தாக்கி கொள்ளையடிப்பது, வேனுடன் கடத்திச் செல்வது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, நக்சல்கள் பாதித்த பகுதிகளில் இது மிகவும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்திடம் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, ஏடிஎம்களில் பணம் நிரப்புவதற்கான புதிய விதிமுறைகளைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

இது குறித்து நிதித்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கையில், இனி தனியார் வாகனங்கள் இரவில் 9 மணிக்கு மேல் ஏடிஎம் மையங்களுக்கு பணம் கொண்டு செல்வதை நிறுத்திட வேண்டும். நக்சல் பாதித்த பகுதிகளில் மாலை 6 மணிக்குள் பணம் நிரப்பிட வேண்டும். ஒரு வேனில் அதிகபட்சமாக ரூ. 5 கோடிக்கு மேல் கொண்டு செல்லக்கூடாது. பணம் கொண்டு செல்லும் வாகனங்களில் கண்டிப்பாக ஜி.பி.எஸ். கருவிகள், சி.சி.டி.வி. கேமிராக்கள் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கருவிகள் பொருத்த வேண்டும். இதனை அனைத்து வங்கிகளின் செக்யூரிட்டி வாகனங்கள், தனியார் செக்யூரிட்டி வாகனங்களும் பின்பற்ற வேண்டும் என்ற வகையில் புதிய விதிமுறைகளை வகுக்கப்பட உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...