ஆதார் இணைப்புக்கான கால அவகாசம் மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிப்பு - மத்திய அரசின் உத்தரவை ஏற்றது உச்சநீதிமன்றம்

டிசம்பர் 15

அரசின் நலத்திட்டங்களைப் பெறவும், மொபைல், பான், வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்க அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை கால அவகாசம் அளித்த மத்திய அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

ஆதாரைக் கட்டாயமாக்குவது தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.

அப்போது, அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் எண்ணை இணைப்பதற்கு அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை அவகாசம் என்ற மத்திய அரசின் அறிவிப்பை ஏற்றுக் கொண்டது. மேலும், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மக்களை மத்திய அரசு கட்டாயப்படுத்தக் கூடாது. மக்கள் விருப்பத்தின் பேரிலேயே மொபைல், பான், வங்கிகணக்கு, அரசின் நலத்திட்டங்களுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம். ஆதார் எண் இல்லாமல் மக்கள் வங்கி கணக்கு துவக்க அனுமதிக்கலாம். அதேநேரத்தில், ஆதாருக்கு விண்ணப்பித்ததற்கான சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....