குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்- தொல். திருமாவளவன்

கோவை, டிசம்பர் 17

குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த தொல். திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது அவர் கூறுகையில், மத்திய, மாநில அரசுகளின் மெத்தனத்தால் ஒக்கி புயலால் உயிரிழந்த ஒவ்வொரு நபருக்கும் 50 லட்சம் ரூபாயும், அரசு வேலைவாய்ப்பும் அளிக்க வேண்டும். இந்துக்கள் கோவில் இடிப்பு குறித்த என் கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதனைக்கொண்டு அரசியல் காரணங்களுக்காகவும், காழ்ப்புணர்ச்சி அடிப்படையிலும் சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா செயல்படுவது வேதனை அளிக்கிறது.

மோடிக்கு நேரடியாகக் களம் காணும் சவால் காங்கிரஸ் தேசிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு உள்ளது. மதவாத சக்தியிலிருந்து நாட்டைக் காப்பாற்றும் மிகப்பெரிய சவாலை அவர் சிறப்பாக செய்வார். 

விவசாயிகளின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டுமே தவிர ஆளுங்கட்சி என்று கண்ணை மூடிக்கொண்டு எந்தத் திட்டத்திற்கும் ஆதரவு தெரிவிக்கக்கூடாது. கெயில் எரிவாயுக்குழாய் பதிக்கும் திட்டத்தை நெடுஞ்சாலை வழியாகச் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக வெற்றிபெற வாய்ப்புள்ளது. வெற்றிபெற வாய்ப்பில்லாதவர்கள் தேர்தலை நிறுத்த சதி செய்து வருகின்றனர். ஆர்.கே.நகரில் காவல்துறையும், தேர்தல் ஆணையமும் வழக்கம் போல் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதுடன், பணியில் உள்ள துணை ராணுவம் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து உள்ளிட்ட விவகாரங்களில் மட்டும் கவனம் செலுத்திவிட்டு பணப் பட்டுவாடவை தடுக்கத் தவறிவருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...