கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு புத்தாடை வாங்கிதர தந்தை மறுத்ததால் 14 வயது சிறுவன் தீக்குளிப்பு

கோவை, டிசம்பர் 17

கோவையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு புத்தாடை வாங்கிதர தந்தை மறுத்ததால் 14 வயது சிறுவன் தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சவுந்தர். இவரது மகன் கிளாட்வின் (14). ஐந்தாம் வகுப்பு வரை படித்த இவர் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு கூலி வேலைக்குச் சென்று வருகிறார். 

வரும் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை தொடர்ந்து கிளாட்வின் அவரது தந்தையிடம் புத்தாடை வாங்கித்தர வலியுறுத்தியதாக தெரிகிறது.

இதற்கு அவரது தந்தை மறுத்ததால் ஆத்திரமடைந்த கிளாட்வின் நேற்று இரவு வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் கிளாட்வினை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இந்த சம்பத்தால் கிளாட்வினின் உடலில் 40 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

புத்தாடை வாங்க முடியாததால் சிறுவன் தீக்குளித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...