தேசிய ஆற்றல் சேமிப்பிற்கான விருதினை வென்ற சிஆர்ஐ பம்ஸ் நிறுவனம்

கோவை, டிசம்பர் 17

இந்திய அரசின் சார்பில் சிஆர்ஐ பம்ஸ் நிறுவனத்திற்கு தேசிய ஆற்றல் சேமிப்பிற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த தினத்தன்று இந்திய அரசின் மின்சாரத் துறை அமைச்சகம் சார்பில் மின்சார சேமிப்பில் தலைசிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும்.

அதன்படி, இந்த ஆண்டு குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் மற்றும் எரிசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு. ராஜ் குமார் சிங் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில் நாட்டில் எரிசக்தி சேமிப்பினை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு என்இசி விருது வழங்கப்பட்டது. இதில், சிஆர்எஸ் பம்ஸ் நிறுவனம் மூன்றாவது முறையாக விருதினை பெற்றது.

இதுகுறித்து சிஆர்ஐ குழும இணை நிர்வாக இயக்குநர் ஜி. செல்வராஜ் கூறுகையில், இதுபோன்ற விருதுகள் எங்கள் நிறுவனத்தை மேலும் ஊக்குவிக்கின்றன. மேலும், நாங்கள் புதுமையான வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் மூலம் எரிசக்தி சேமிப்பு பம்ப் செட் வழங்க முயற்சி மேற்கொள்ள உள்ளோம். இது வாடிக்கையாளர்கள், சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நாட்டிற்கு பெருமளவில் பலனளிக்கும். மத்திய அரசின் இந்த விருது சிஆர்ஐ நிறுவனத்தை மேலும் ஒருபடி உயர்த்தியுள்ளது என்றார்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...